கவிதை - எல்லோர்க்கும் பெய்யும் மழை (காதலன்) - தானு
சில்லென்று சிந்திய
அவன் சிரிப்பழகு சற்று நில்
என்று நிலை தடுத்து
காதல் சொல் என்று கொள்ளையிட
மையல் கோண்டேன் அவன் காதலில்
அவனும் மையல் கொண்டான்
போல் எண்ணியிருந்தேன்
கோல விழியான்
மாயவனின் அழகை
மிஞ்சும் சீல அழகோன்
வாரி அணைக்க விளைகையில்
வாச மலர் பெண்ணொருத்தி
வந்துவிடு என்னிடம் என்றாள்
அவனும் சென்றுவிட்டான்
சென்றவன் நீலக் கடலைபோல
கரை வந்து மீண்டும் சேர்ந்தான்
இன்னோருத்தியுடன்!!!!!!!!!!
அய்யோ அவன் "எல்லோர்க்கும் பெய்யும் மழை"