(Reading time: 1 - 2 minutes)

கவிதை - எல்லோர்க்கும் பெய்யும் மழை (காதலன்) - தானு

lover

சில்லென்று சிந்திய
அவன் சிரிப்பழகு சற்று நில் 
என்று நிலை தடுத்து 
காதல் சொல் என்று கொள்ளையிட

மையல் கோண்டேன் அவன் காதலில்
அவனும் மையல் கொண்டான் 
போல் எண்ணியிருந்தேன்

கோல விழியான் 
மாயவனின் அழகை 
மிஞ்சும் சீல அழகோன்

வாரி அணைக்க விளைகையில்
வாச மலர் பெண்ணொருத்தி
வந்துவிடு என்னிடம் என்றாள்
அவனும் சென்றுவிட்டான்

சென்றவன் நீலக் கடலைபோல
கரை வந்து மீண்டும் சேர்ந்தான்
இன்னோருத்தியுடன்!!!!!!!!!!


அய்யோ அவன் "எல்லோர்க்கும் பெய்யும் மழை"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.