(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கரைகிறது நிமிடம் - தானு

time

காத்திருப்புக்களுடன் 
கரைகிறது நிமிடம்
நெடும் சாலை வழியே 
நினைவுகள் சென்று மீள
காத்திருப்புக்களுடன் 
கரைகிறது நிமிடம்

பட்சிகளே புள்ளினமே
சிறகடித்துப் பறக்கும்
பட்டாம் பூச்சிகளே
என்னுயிரின் நலம் கேட்டு
வாழ வைப்பீர் என் காத்திருப்பை

வங்கக் கடல் 
தழுவி வரும் தென்றலே நீ
கண்டுதான் சொல்லேன் 
என்னவர் என்னை காணும்
நாளை காத்திருக்கும் 
என் நிலை தன்னை

வானளவு ஏக்கம்
வாரி அணைக்க என்னவர்
வரவில்லை எனில்
ஓல அலை
அள்ளிச் செல்லுங்கள்
என்னுயிரை.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.