கவிதை - கரைகிறது நிமிடம் - தானு
காத்திருப்புக்களுடன்
கரைகிறது நிமிடம்
நெடும் சாலை வழியே
நினைவுகள் சென்று மீள
காத்திருப்புக்களுடன்
கரைகிறது நிமிடம்
பட்சிகளே புள்ளினமே
சிறகடித்துப் பறக்கும்
பட்டாம் பூச்சிகளே
என்னுயிரின் நலம் கேட்டு
வாழ வைப்பீர் என் காத்திருப்பை
வங்கக் கடல்
தழுவி வரும் தென்றலே நீ
கண்டுதான் சொல்லேன்
என்னவர் என்னை காணும்
நாளை காத்திருக்கும்
என் நிலை தன்னை
வானளவு ஏக்கம்
வாரி அணைக்க என்னவர்
வரவில்லை எனில்
ஓல அலை
அள்ளிச் செல்லுங்கள்
என்னுயிரை.....