கவிதை - விழுந்தவரின் எண்ணங்கள் - தானு
நாலு சுவருக்குளே
நாளெல்லாம் குந்தி இருந்து
நாளை விடியலுக்காய்
நானும் பாடுபட்டேன்
காற்று அடித்தாலும்
காலை விடிந்தாலும்
சாலை நடு வழியே
சோற்றுக்கான தேடல் தான்
வீட்டை பிரித்து
வயிற்றை நிரப்பி
கூட்டை விட்டு
வெளியே வந்தேன்
நாட்டைக்குறைதான் கூறிப்பாரேன்
நாலா புறமும் நாணயக் கொள்ளை
நாசி வறண்ட வறுமை நடுவே..