கவிதை - தா ன ம் - ரவை
தானத்தில் சிறந்த தானம்
நிதானம் என்பது உண்மை,
ஊனத்தால் வாடுவோர்க்கு
உறுப்புத்தருவது நன்மை!
கிட்னிகள் இரண்டும் பழுதாய்
தவித்திடும் நோயாளிக்கு
கிட்னிகள் இரண்டில் ஒன்றை
கொடுப்பது நிச்சயம் புண்ணியம்!
இறந்ததும் உடலை தீயில்
இடுவதில் லாபம் எவர்க்கு?
உறுப்புகள் தானம் செய்து
உயிரை காப்பது சிறப்பு!
சிவனுக்கே கண்ணைத் தந்த
கதையை மெய்யென ஏற்போம்,
தவறிலை இறந்தவர் கண்ணை
தானம் செய்தே தீர்வோம்!
இறந்தவர் இதயம் தந்து
இன்னொரு உயிரைக் காப்போம்,
இரத்தப் பிளாஸ்மா ஈந்து
இரக்கம் இதுதான் என்போம்!
{kunena_discuss:779}