கவிதை - பலப் பல பத்தாண்டு வாழ்க! - ரவை
பத்தாண்டு சிறுமி சில்ஸீ!
புத்தம் புதிதுபோல், ஐ ஸீ!
எத்தனை எத்தனை புதிய
எழுத்தாளர்கள் பிறக்க
உத்தம லட்சியத்தோடு
உன்னத வெப்சைட் ஒன்று
திட்டமிட்டுத் தந்தார்,
தாய்க்குலத்து ஏழுபேர்கள்!
கேளுங்கள், கொடுக்கப்படும்!
சொன்னது நம்ம சில்ஸீ!
நாளுக்கொரு புதிய பகுதி!
நல்ல நல்ல கதைகள்மிகுதி!
சூளுரைத்து வெற்றி காண
சோதரிகள் படை குவித்து
வாளெடுக்காமலேயே
வெற்றிகள் தந்தாள் சில்ஸீ!
கதைகளில் நெடிது என்றும்
சிறுகதைப் பிரிவு ஒன்றும்
நிதம் நமை மகிழ்விலாழ்த்த
நற்றமிழ் கவிதை மற்றும்
விதவித கட்டுரைகள், மேலும்
விமரிசனம், பேட்டியென்றும்,
புதுப்புது ஜோக்ஸ், தவிர
படைப்புகள் அளவேயில்லை!
ஆங்கிலத்தில் வேண்டுமென்றார்,
அள்ளிக்கொள் என்றாள், சில்ஸீ!
தேங்கிநின்ற இலக்கியத்தை
தடையுடைத்து தந்தாள், சில்ஸீ!
ஓங்குபுகழ் தமிழினத்தின்
உள்ளத்தில் வீற்றாள், சில்ஸீ!
ஏங்காதே! இனி உனக்கு
எல்லாமே தருவாள், சில்ஸீ!
நூற்றுக்கும் அதிகமானோர்
நாள்தொறும் அனுப்புகின்ற
ஏற்புடை படைப்பனைத்தும்
எழிலுடன் முன்நிறுத்தி,
நேற்றுபோல் இன்று இல்லை
நேர்ப்பட காண்பீரென்று
ஊற்றென ஒவ்வொரு நாளும்
உவந்தளித்தாள், சில்ஸீ!
பாராட்டும் வாயினிக்கும்!
போற்றிடும் சொல்சுவைக்கும்!
ஏராளமாய் ரசிகர் வாழ்த்தும்
எங்கெங்கும் எதிரொலிக்கும்!
சீராட்டி வளர்ப்பதற்கு
செந்தமிழர் அணிவகுத்து
பேராழிபோல் நிற்கும்
பேரழகைப் பார், சில்ஸீ!
{kunena_discuss:779}