கவிதை - என் ஆன்மாவின் குரல்! - (ராம்.ராமகிருஷ்ணன் - மொழிபெயர்ப்பு) ரவை
என்ன செய்வதென தெரியாமல்
தடுமாற்றம் எழும்போது,
எந்தப் பக்கம் செல்வதென புரியாமல்
பிரச்னைகள் வரும்போது,
என் ஆருயிர் நண்பன் வழிகாட்டி
என்னுள் வாழும் ஆன்மாவை கேட்பேன்!
என் ஆன்மா ஒருபோதும் உறங்காது!
இரவெல்லாம் பணியாற்றும் காவலாளிபோல!
பயணம் நெடிது, பாதையும் இருட்டு,
இருப்பினும் ஆன்மா வழி தவறாது!
என் முடிவுகளும் தவறாகாது!
குரல்கள் நிறைந்தது, உலகவாழ்க்கை!
மௌனம் எங்கும் எதிலும் அன்னியன்!
இத்தனை சத்தம், களேபரங்களிலும்
என் ஆன்மா சொல்படி வாழ்வில் நடப்பேன்!
வாழ்வில் சோதனை, ஐயம் வந்தால்
தயாராயிருக்கும் ஆன்மா உதவி!
ஆன்மா சொல்படி கேட்பவன், அறிஞன்!
அவனே அடைவான் நிரந்தர நிம்மதி!
உள்மனக்குரலே நம் வழிகாட்டி!
சரிவை தடுக்கும், உயர்வை கொடுக்கும்!
வெற்றி, புகழ், செல்வம் எல்லாம் சேரும்!
நிரந்தர அமைதி, மகிழ்வும் கிட்டும்!