கவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை
ஊருசனம் கூடிடுச்சு
உற்சாகமும் பெருகிடுச்சு
பேருசொல்லி வாழ்கவென
பெரியகோஷம் கேட்டிடுச்சு!
ஒருவர்வந்து மேடையேறி
ஒருமணிநேரம் உரக்கப்பேசி
ஓட்டு தனக்கு போடச்சொல்லி
உருக்கமாக வேண்டினாரு!
கூடியிருந்த அத்தினிபேரும்
கையைதட்டி குரல்எழுப்பி
ஆடிமகிழ்ந்து பாடினாங்க!
அத்தினிபேரும் தேடினாங்க!
அழைத்துவந்த புரோக்கர்களை!
அள்ளித்தரேன்னு சொன்னவரை!
குழைந்துபேசி கூட்டியவரை!
கூட்டம் சேர்த்த கயவர்களை!
தேடித் தேடி வெறுத்துப்போச்சு!
கண்கள் ரெண்டும் பூத்துப்போச்சு!
வாடிப்போன முகங்களாச்சு!
வீங்கிப்போன கால்களாச்சு!
ஓட்டுகேட்டு வருவாங்கல்ல,
ஆப்புவைப்போம் ஆழமாக!
நோட்டை காட்டி மோசம் செய்த
நீசருக்கு வேட்டுவைப்போம்!
பத்துநாளில் மறந்துபோச்சு!
பகைமைசூடு பறந்துபோச்சு!
கத்தைநோட்டை காட்டியதும்
கோபமெல்லாம் ஓடிப்போச்சு!
இப்படித்தான் இந்தநாட்டில்
எல்லாதேர்தலும் நடக்குது!
அப்பாவிசனமும் நம்பி
அப்படியே பிணியில் வாடுது!
சனநாயகம் பெயரில் மட்டும்!
சனங்களுக்கோ தொடர்ந்து கஷ்டம்!
இனியும் இப்படித்தான் இருக்குமெனில்,
இந்த நாடு அழிந்துபோகட்டும்!