கவிதை - கீழ்நோக்கிப் பாயும் ஆறு - ரவை
மலையிலிருந்து கற்களை
உருட்டிக்கொண்டு விழுந்து
சமவெளியில் நீர்பாய்ச்சி
செழுமையாய் பயிர் வளர்த்து
கால்வாயாக கீழ்நோக்கி ஓடி
கடலில் கலக்கிற ஆற்றுநீர்,
மாற்றுதிசையில் புகுந்தால்
சுனாமியன்றோ!நாசமன்றோ!
அதுபோலப் பிள்ளைகள்
தங்கள் வாரிசுகளையன்றி
பெற்றோரைப் பேணுவது
பேராபத்தை தருமோ?
இயற்கையின் முரணோ?
இறைவா! நீயே சொல்!