கவிதை - அன்பு - ரவை
அன்பு என்பது அடுத்தவனில் உன்னைக்காண்பது,அறிவாயே!
அடுத்தவனின் 'அடுத்த' நிலை
பொய்யென்பதையும்உணர்வாயே!
உருவில்'மனிதனை' காணுகின்ற
அறிவே 'அடுத்த'வனை பிரித்துவிடும்!
ஆன்மா ஒன்றே அறிந்திடுமே,
அனைவரும் 'ஒன்றே' என்பதனை!
அன்புக்கு ஏங்குவது ஏனென்றால்
அடுத்தவன்அங்கீகாரம்நாடுவதால்,
அங்கீகாரம்உருவில்இல்லை,
அகத்துள்வாழும்ஆன்மாவில்!
நிறைந்து நிற்பது ஆன்மாவே
உணர்வால்அறிவோம்யாவருமே,
இந்தக் கணத்தில் வாழ்ந்திடுவோம்!
என்றும்அன்பில்மகிழ்ந்திடுவோம்!