(Reading time: 1 - 2 minutes)

கவிதை - புதியதோர் உலகம்! - ரவை

புதியதோர் உலகம் செய்வோம்!--மூட
நம்பிக்கைகளை
உடைப்போம்!

மனைவியிழந்தவன்
மறுமணம் செய்து
புதுவாழ்வு வாழ்வதுபோல
விதவைகளுக்கும்
மறுமணம் செய்வித்து
பெருவாழ்வு தருவோம்!

விதவைகளை ஒதுக்கி
வைக்கும் மடமையினை
தகர்ப்போம்! அவர்களை
அரங்கேற்றி அரியணை
அமர்த்துவோம்!

காலம், கணவன் உயிரை
கொள்ளையடித்தால்,
ஞாலம், மனைவியை ஏன்
கோலம் அழிக்கவேண்டும்,
அவள் தவறா?

சிந்திப்போம், அநீதிகளை
சந்திசிரிக்கவைத்து செதில்
செதிலாக்குவோம்!
சகத்தீரே! சேர்ந்திடுவோம்!
புதியதோர் உலகம் உடனே
படைப்போம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.