கவிதை - இது உன் நேரமா? - ரவை
வெட்டுக்கிளியே!
வெட்டி வீழ்த்தாதே!
கூட்டமாய் வந்தே
களத்தில் இறங்கி
பச்சைப் பயிர்களை
பலி கேட்பதும் ஏன்?
உலகே இன்று
உன்னைக் கண்டு
மிரள்வது பார்த்து
மகிழ்கின்றாயா?
கொரோனா என்று
கொடுமை ஒன்று
வாட்டுது எம்மை!
வருந்துவது உண்மை!
வெட்டுக்கிளியே!
விட்டுவிடு எம்மை!