(Reading time: 2 - 3 minutes)

கவிதை - காமம் - குணா

lust

காமம்
நீ இன்றி
நானும் இல்லை ...நாமும் இல்லை ...
கடவுளின் காமமே
இப்பூமியின் ஜனனம்!

காமம்
உணர்வுப் பசிக்கும்..
உடல் பசிக்கும்..
நீயே விருந்து..
நீயே மருந்து.!!.

காமம்
அலாதி அன்பின் வெளிப்பாடே மோகம்..
மோகத்தின் அலாவிய வெளிப்பாடே காமம்.. !

காமம்
காதல் போல் புனித உணர்வுதான் காமம்
காதலில் தொலையுங்கள்...
காமத்தில் தேடுங்கள்..
ஒருவரை ஒருவர் மட்டும்!!

சூது வாது
சூட்சமம் அறிந்து
சூரிய அஸ்தமனத்தின் பின் வெளிப்படுவதே காமம் ...
நீண்ட இருளே அதற்கு தோழி..!
கண்களின் வழி சம்மதம் பெற்று
கட்டிலின் வழி சமரசம் செய்யும் ...!!

இக்காலத்தில்

குட்டிக் கருவும் கருச்சிதைவடைகிறது ...?

அறுவடை நாள் முன்னரே
கருகும் பயிர்களாகிறது?
அர்த்தம் புரியா வயதில்
கர்ப்பம் தரிக்கிறது?
உரம் ஏதும் போட்டாலும்
மீண்டும் உயிர் பெறாது ..?!

நவ நாகரிக உடைகள்
கொஞ்சம் காமத்தின் கதவை திறப்பதாகத் தான் இருக்கிறது..

மேலை நாட்டு மோகம்
இந்த விஷயத்திலும் கொஞ்சம்
விபரீத விளையாட்டு விளையாடுகிறது ..!

காரணம் சொல்லி நழுவ
புத்தகம் திருடப்படவில்லை ..
சிறு காகிதம் கசக்கப்பட்டிருக்கிறது ..?

நிச்சயம் இந்த விஷயத்தில்
பகுத்தறிவு கொஞ்சம் பகல் கனவாய் இருக்கிறது ..
பட்டறிவு பயனற்றுப் போகிறது ...?

அனைவரையும் அரவணைப்போம்
அன்பு காமம் வேறுபாட்டோடு ..!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.