(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காற்று வெளியிடை - குணா

wind

பெயரிடப்படாத தெருவில்
சரியாய் செப்பனிடப்படாத சாலையோரத்தில்
வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட
வீட்டின் முன்பக்கத்தின் ஒரு மூலையில்
கிழிந்து ஒட்டுப் போட்டும் போடாமலும்
என்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒரு நிறத்தில்
ஆடை அணிந்து
அழுக்கு முகம் கொண்ட
அகவை அறுபதுக்கும் எழுபதுக்கும்
இடைப்பட்ட தோற்றம் கொண்ட ஒரு முதியவர்
இரு கால்கள் நீட்டிய வன்னம் ஒய்யாரமாய் உட்கார்ந்து
துருப்பிடித்த பழைய ஆணி ஏறிய
நாளைக்கு சாகும் நிலையிலிருந்த
அந்த பழைய டயரை கழட்டி
பஞ்சர் பார்த்து கொண்டிருந்தார் ...
வயோதிகம் காரணமாய்
ஓட்டை சரிபட அடைக்காமல்
தன் மூச்சு காற்று முழுவதும் கொடுத்து
காற்று நிரப்பி நிரப்பி சோர்ந்து போனார் ...
இன்றைக்கு உணவும் காற்றிலே கலைந்ததை
எண்ணி எண்ணி ஏங்கினார் ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.