கவிதை - மரதாபிமானம் - குணா
முறுக்கு மீசை
மிடுக்கு உடம்பு
மரம் வெட்ட
கோடரியுடன்
உச்சிக்கு சென்றான் ...
மெல்ல மெல்ல
கொத்தி கொத்தி
கொலைசெய்து கொண்டிருந்தான் ..
சட்டென நிலை தடுமாறி
சறுக்கி கீழே வந்தவனை
மரத்தின் வலதுகை தாங்கிப்பிடித்து
கிளைகளால் தலை கோதிவிட்டது.....