கவிதை - அம்மரம் - குணா
என்னை நீ
உதாசித்து உதறியபோதும்
அந்த தெருவோர புளிய மரம்
என் காதல் சின்னத்தை
மார்பிலே ஏந்திக்கொண்டது ..
இருவரும் சேர்ந்தே
உன் நினைவுகளில்
நித்தம் நித்தம் நிந்தித்திருந்தோம்...
கடந்த வாரம் பெய்த கனமழையில்
என் கண் முன்னே
அம்மரம் சாய்ந்த போது
அம்மணமாய் என் காதல்
நடுரோட்டில் பிணமானது .....