(Reading time: 1 minute)

கவிதை - அம்மரம் - குணா

tamarind

என்னை நீ 

உதாசித்து உதறியபோதும் 

அந்த தெருவோர புளிய மரம் 

என் காதல் சின்னத்தை 

மார்பிலே ஏந்திக்கொண்டது .. 

இருவரும் சேர்ந்தே 

உன் நினைவுகளில் 

நித்தம் நித்தம் நிந்தித்திருந்தோம்... 

கடந்த வாரம் பெய்த கனமழையில் 

என் கண் முன்னே 

அம்மரம் சாய்ந்த போது 

அம்மணமாய் என் காதல் 

நடுரோட்டில் பிணமானது .....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.