கவிதை - கடவுள் - விஜயலக்ஷ்மி
மருத்துவம் இல்லா
உலகம்
மன நிறைவோடு
வாழும் வாழ்க்கை
விரோதிகள் அற்ற
சூழல்
எங்கும் இயற்கையின்
பிரதிபலிப்பு
கோபம் பொறாமை அற்ற
வாழ்வு
எங்கும் அன்பின்
பரிமாற்றங்கள்
முன்னோர்கள் வாழ்ந்த
வாழ்க்கை
இவையே கடவுளிடம்
வரமாக
வேண்டுகிறேன்