(Reading time: 1 - 2 minutes)

கவிதை - எதை ரசித்தேன் - ப்ரீத்தி

admire

கண்ணில் கண்டதை எல்லாம் ரசித்தேன்

குழந்தையின் சிரிப்பு

குமரியின் வெட்கம்

 

பறவையின் பாடல்

பறந்து விரிந்த பூமி

 

சூரியனின் சுட்டறிகும் ஒளி

நிலவின் குளுமை

 

ஆர்ப்பரிக்கும் அருவியின் வீழ்ச்சி

அமைதியான நதியின் பயணம்

 

இன்னும் இன்னும் ரசிக்கத்தான் எத்தனை எத்தனை

இந்த பூமியிலே - ஏனோ ரசிக்கத்தான் நேரம் இல்லை

 

ஒரு நொடி நின்று உனையே நீ முதலில் ரசித்து பார்

ஒவ்வொரு நாளும் புதியதாய் பிறந்து வந்த மகிழ்ச்சி உண்டாகும்

 

ஒரு பிறப்பு, ஒரு வாழ்க்கை, ஒரு உயிர்

ரசனையோடு வாழ்வோம், மகிழ்வோம்.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.