கவிதை - ப்ரியமானவளே.... - கலைசெல்வி
நீ எனக்கு ப்ரியமானவளாய்
நேற்று இருந்தாய்
என் கனவுகளுக்குள்
இதயத்தின் துடிப்பானாய்
இன்றும் இருக்கின்றாய்
என் கண்ணீருக்குள் உப்பாய்
கறை படிந்த கன்னங்களில்
உன் இதழ்களால் நீ பதித்த
முத்திரைகளால் எத்தனையோ
இரவுகள் தூக்கம் மறந்தது
எனக்கு மறக்கவில்லை
ஆனால் உனக்கோ அது ஏனோ
நினைவுகளில் நிழலானது,