கவிதை - ஒருவராய்.... - கலைச்செல்வி அறிவழகன்
ஒரு குடைக்குள் இருவராக
கைப் பிடித்து நாம் நடந்தது
உன் நினைவினில்
கடந்த காலமென்றால்...
உன் இதயத்தினிலிருந்து
என்னைத் தூக்கி எறிந்தது
மன்னிக்க முடியாத
இன்றைய தினமானது.
நாம் இருவரும் இணைவது
ஒரு முறையேனும்
நிகழ் காலமானால்
நிச்சயமாய் என்னை நீ
புரிந்து கொள்வாய்
எனினும் எனக்கு
நீ என்றும் தேவையில்லை.