கவிதை - இதயம் படபடக்க... - கலைச்செல்வி அறிவழகன்
துடிக்கும் இதயத்தின்
ஓசையில் நான் தவித்திருக்க
என் கைகளின் விரல்களும்
உணர்வுகளால் நடுங்கிட
உன் குரல் கேட்டவுடன்
எத்தனை மாற்றங்கள்
என்னிடத்தில் இன்று
பருவ நிலை மாறியே
பொழியும் காதல் மழையில்
நனைவது நான் மட்டுமல்ல
நீயும் தான் என் இனியவனே.