கவிதை - அருஞ்சுனை காத்த அய்யனார் - கலைச்செல்வி அறிவழகன்
துணை நீ இருந்தால்
துணிவுடன் நான் நடப்பேன்
பல நூறு அடிகளையும்
மென்மையான தென்றலாக.
அணைப் போல தடுத்து
நீ நிறுத்திடுவாய்
என்னை நோக்கிய துன்பமெல்லாம்.
நான் கேட்கமாலேயே தந்திடுவாய்
எல்லாவிதமான நன்மைகளையும்
உன்னையே நான் நாடி நிற்கும்
அத்தனை நாட்களிலும்
வெற்றியே என் வாழ்விலுமே.