கவிதை - ஏனடி இந்த கொலை வெறி? - கலைச்செல்வி அறிவழகன்
என் காதல் உணர்வுகளைக் கொன்று
உன் வீட்டின் கதவுகளால்
கனவுகளுக்கு தடை போட்டாய்.
நினைவுகள் தப்பிய பின்னும்
ஆழ் மனதில் கேட்டிடும்
காதல் இதயத்தின் துடிப்புகளை
உரிமையுடன் கொன்றவளே
இன்னும் தணியவில்லை
என் காதல் தாகம் தான்.
உயிர்ப்பிக்கும் தண்ணீர்
எனக்குத் தேவை எனத்
தெரிந்த பின்பும்
தணியவில்லையா உனக்கு
என் காதலைக் கொல்லும்
ஆறாத கொலை வெறி?