கவிதை - இறுதிவரை... - கலைச்செல்வி அறிவழகன்
மூச்சு இயங்கிட மறக்கும்
இறுதி நிலையிலும்
உன்னைப் பற்றிய ஞாபகங்கள்
என் இதயத்தில் வலித்திட
மென்மையான காற்றினில் உன்னை
நான் உணரும் நொடிகளில்
காதல் தேவனின் அருளினில்
மெல்ல மெல்ல உருக் கொள்ளும்
மறுமுறை நான் பிறந்திட
உன்னுடன் இணைந்திடும் நேரமே.