கவிதை - தவிப்பு.... - கலைச்செல்வி அறிவழகன்
கண்களின் படபடப்பில்
தெரியாதா என் மனதின்
நிலையற்ற தவிப்பு?
வழியின்றி தவிக்கும்
உள்ளத்தின் துடிப்புகளுக்கு
என்று தான் விடுதலை?
உன் இறுகிய அணைப்பினில்
அத்தனை தடைகளும் விலகிடும்
இன்னும் புரியவில்லையா
உனக்கு என் இயலாமை?