கவிதை - நினைவுகளின் பிடியில்... - ஜெப மலர்
உணர்வெல்லாம் நிறைந்த
உன் நினைவுகள்
வாழ்வின் வெற்றிடத்தை
வெற்றி கொண்டதே....
தனிமை நிறைந்த இரவு
என்னவனின் அன்பை
எடுத்துரைக்கிறதே....
தோள் சாய்ந்த நொடிகள்
தந்திட்ட அமைதி
ஆழ்மனதில் இனிக்கிறதே...
நெஞ்சில் முகம் புதைத்து
நேசத்தோடு அணைத்த நொடிகள்
மனதோடு உறவாடிடுதே...
என்னவனே!! உன் நினைவுகள்
என்னோடு வாழ்கிற வரை
தோல்வி நான் அடைவதில்லை...
தனிமை என்னை வாட்டுவதில்லை..
என் மனம் நிறைந்த
என்னவனுக்கு என்
அன்பு முத்தங்கள்..