(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நினைவுகளின் பிடியில்... - ஜெப மலர்

I_Love_You_Always_Forever

உணர்வெல்லாம் நிறைந்த

உன் நினைவுகள் 

வாழ்வின் வெற்றிடத்தை 

வெற்றி கொண்டதே....

தனிமை நிறைந்த இரவு 

என்னவனின் அன்பை 

எடுத்துரைக்கிறதே....

தோள் சாய்ந்த நொடிகள் 

தந்திட்ட அமைதி 

ஆழ்மனதில் இனிக்கிறதே... 

நெஞ்சில் முகம் புதைத்து

நேசத்தோடு அணைத்த நொடிகள் 

மனதோடு உறவாடிடுதே... 

என்னவனே!! உன் நினைவுகள்

என்னோடு வாழ்கிற வரை 

தோல்வி நான் அடைவதில்லை... 

தனிமை என்னை வாட்டுவதில்லை.. 

என் மனம் நிறைந்த 

என்னவனுக்கு என் 

அன்பு முத்தங்கள்.. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.