(Reading time: 1 - 2 minutes)

கவிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்

always-thinking-of-you-dear

ஒரு நாளில் ஒரு முறையேனும் 

உன் முகம் பார்க்காமல் 

இமை மூட மறுக்கின்றதே! 

காதலாய் தரும் முத்தம் 

கிடைக்க என் 

கன்னங்கள் தவம் செய்கிறதே... 

கணவனாய் இதழ் முத்தம் பெற 

காத்திருந்து கழியும் நாட்களில் 

செவ்விதழ் துடித்து போகின்றதே... 

என்னவனின் ஒரு முத்தத்திற்கு 

ஈடாகும் பொருள் ஒன்று 

ஈருலகில் எங்கும் உண்டோ? 

விரக்தியாய் வாழ்ந்த

வாழ்க்கையினை 

வசந்தமாக்கிய என்னவனே... 

பாசமாய் வினவும் வார்த்தை படிக்காமல் 

பசியும் தெரிவதில்லை 

உறக்கமும் வருவதில்லை... 

காதலனே உன்னோடு உறவாட 

கலையாத கனவுக்காய் 

கண் மூடி காத்திருக்கிறேன்!!! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.