கவிதை - மரண வலி - ஜெப மலர்
வார்த்தைகளாக செய்தி சொல்லாமல்
விட்டு போகும் மௌனங்களில்
உதடுகளில் உணர்வின்றி
உதிர்க்கும் விரக்தி புன்னகை
மரணத்தின் வலியை
மனதில் காட்டிடுதே...
கடலின் ஆழம் அறிந்திடலாம்
காதல் கொண்ட மனதின்
ஆழத்தை அறிந்திட
அறிஞர் யாரும் பிறந்திடவில்லையே...
கண்ணோடு முட்டிக் கொள்ளும்
கண்ணீரை அடக்கும் போது
உள்ளத்தை உடைக்கும் வலியை
உணர்ந்திட்டோர் யார் இங்கே?
தனிமை என்னும் சிறையில்
தன்னந்தனியாய் அடைக்கப்படுகையில்
ஆறுதலுக்காக உறக்கம் வேண்டி
ஆதங்கத்துடன் காத்திருக்கையில்
வராத தூக்கத்தில்
வருவது கண்ணீர் மட்டுமே!!!...