(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அன்பு வேண்டி... - ஜெப மலர்

love

உன் சிந்தனையால்

என்னை சிறை வைத்துள்ளாய்... 

உள்ளத்தின் ஆழத்தில் 

உலா வருகிறாய் நினைவுகளாய்... 

தனிமையின் மெளனத்தில் 

புன்னகையாய் நிறைந்திருக்கிறாய்... 

என் விழி கோட்டையில்

ஒளியாய் வழி காட்டுகிறாய்... 

இரவின் காரிருளில் 

இரகசியமாய் மிளிருகிறாய்... 

உயிரும் உடலும் நீயே நிறைந்திருக்க 

உள்ளமெல்லாம் உன் நினைவுகள் சுமந்து 

உயிர் காதலுடன் மண்டியிடுகிறேன் 

உன் அன்பை வேண்டி... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.