கவிதை - எங்கெங்கும் நீயே.. - ஜெப மலர்
எங்கே இருக்கிறாய்
என கண்கள் தேடுகிறது..
எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறாய்
என்கிறது இதயம்..
உன் பாச மழையில்
நீரை வெளியிட காத்திருக்கிறது கண்கள்..
எழுதுகோல் விரலோடு விளையாட
எல்லா இடங்களிலும் கிறுக்கலாய் உன் பெயர்கள்..
பாடம் மனதில் ஏறுகிறதோ இல்லையோ
வார்த்தைகளில் உன் பெயர் அடையாளமிடப்படுகிறது..
உதடுகள் அருகில் உரையாடினாலும்
உள்ளம் உன்னோடு உறவாடுகிறது...
என் பெயரை யோசித்தாலும்
உன் அலைபேசி எண்
சரளமாக தவழ்கிறது இதழ்களில்..
ஊன் உடலெங்கும்
உன் நினைவு ஊறிக் கிடக்க
உன் சுவாச காற்றை
உயிர் மூச்சாக ஏற்கிறது இதயம்...