(Reading time: 1 - 2 minutes)

கவிதை - தனிமையில்... - ஜெப மலர்

love

ஓர விழிப்பார்வையில்

ஓராயிரம் சந்தோஷ அலைகள்... 

தோற்று போகிறேன் ஒவ்வொரு முறையும் 

உன் நேசமிகு அன்பிற்கு முன்..

தோற்று போகிறேன் ஒவ்வொரு முறையும் 

உன் அன்புமிகு வார்த்தைகள் முன்... 

உன் நினைவுகளோடு பேசி பேசி 

ஊமை பாஷையும் கற்றுகொண்டேன்!!

உடன் ஒருவரும் இல்லாமலும்

உதடுகள் தானாய் பேசுகின்றன..

இதயத்தில் இருக்கும் முகம் ரசித்து

இதழ்கள் அழகாய் புன்னகைக்கின்றன.. 

மலர்கின்ற நாள் புதிதாய் தெரிகின்றன 

மன்னவனின் நினைவுகளினால்...  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.