கவிதை - அருவியே! அழகின் உருவே - ஜெப மலர்
அன்பாய் பாய்ந்து வந்து
ஆழ்மனதோடு ஒட்டி கொள்ளும்
இன்ப சாரலோடு
ஈ என்று சிரிக்கையில்
உள்ளத்தின் மகிழ்ச்சி
ஊன் எங்கும் சென்று
எல்லையில்லா ஆனந்தம் தர
ஏற்ற தாழ்வு மறந்து
ஐயம் அறவே நீக்கி
ஒற்றுமையாய் ரசிக்க வைக்கிறது
ஓவென்று கதறி விழும் அருவி...