(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மழையோடு ஒரு நாள் - ஜெப மலர்

rain

மழை துளிகள்

மண்ணை அடையும் போது

குளிர்வது என் மனமும் தான்...

மண் வாசனை மட்டுமல்ல

மனதில் புதைந்த நினைவுகளும் 

உயிர் பெற்று எழுகிறது...

ரசித்து பேசிய வார்த்தைகளும்

விரும்பி அருந்திய தேநீரும்

திளைக்க வைத்த அன்பும்

தவிக்க விட்ட தனிமையும்

உயிராக உறவாடிய பாசமும்

உதறி தள்ளிய ஒதுக்கமும்

வழிகாட்டிய அக்கறையும் 

அரவணைத்த நேசமும் 

கண்களில் நீராய் வடிகிறது

மழைத்துளியே!  நீ வருடுகையில்... 

என் தேகம் நீ நனைக்கையில்

என் உயிர் வரை ஊடுருவுவது

சோகம் மட்டுமல்ல சந்தோஷமும் தான்... 

விரும்பி அழைக்கிறேன் உன்னை 

விரைவாய் வந்திடு பூலோகம்.... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.