கவிதை - உன்னையன்றி துணையில்லை - ஜெப மலர்
உன்னை விட்டு பல மைல் தூரம்
நான் தள்ளி இருந்தாலும்
உள்ளம் உன்னை சுற்றியே வருகிறது...
உறவை தாண்டியும்
உருவான பாசம் நமது
உயிரோடு கலந்திருக்கிறது...
தலை கோதிய உன் கரம்
தயவாய் தாங்கியதால்
தஞ்சம் புகுந்தேன் உன் உள்ளத்தில்...
தனித்து நிற்க விரும்பினாலும்
துணையாய் நீ வந்திடு என்று
தயங்கி வேண்டுவதும் உன்னிடமே...
கண்ணில் கண்ட காதல்
காலத்திற்கும் வேண்டும் காதலா...
நெஞ்சில் நிறைந்த நேசம்
நாளெல்லாம் வேண்டும் நாயகா...
மனதோடு பதிந்த பாசம்
மணித்துளிகளெல்லாம் வேண்டும் மன்னவா...
அன்பினை அடையாளம் காட்டிய
அன்பே உன் உறவு
ஆயுளுக்கும் வேண்டும் ஆருயிரே...