கவிதை - கடலும் நானும்... - ஜெப மலர்
நீலப்பட்டாடை போர்த்திய
நீர் மகள் அவள்...
நிலத்தில் நிற்கும் என்னை அணைக்க
நெடுந்தொலைவிலிருந்து வருகிறாள்..
துள்ளி குதித்து வரும் அழகிலே
துன்பம் மறைய வைக்கிறாள்...
விட்டு போக மனதில்லாமல்
தொட்டு உரசி போகிறாள்...
மனம் ஆட்கொண்ட தோழி
மனமின்றி பிரிந்து போகிறாள்..
உன் அழகை ரசிக்கையிலே
என் உள்ளம் அடையும்
உவகையை வருணித்திட
உலக மொழிகளில் வார்த்தைகளில்லை...
பிரிவின் வலியை உணர்ந்த நீ
பாறையில் மோதி சிதறுகிறாய்...
உன் நிலையை கண்டு நான்
என்னை தொலைத்து நிற்கிறேன்
உன் அன்பிலே...