கவிதை - நீயும் நானும்... - ஜெப மலர்
உச்சி வெயில் பயணத்தில்
உன்னோடு சென்ற நினைவு...
கண்ணாடி வழி பார்வையில்
கதகதக்கிறது உடல்...
கையோடு கை கோர்த்து
முதுகில் முகம் சாய்க்கையில்
உயிரோடு உணர்வு சாரல்
உன்னோடு நெருங்க செய்கிறதே...
உள்ளங்கை முத்தம்
உயிர் மொத்தத்தையும் அள்ளுதே...
கன்னத்தில் இதழ் பதித்து
கழுத்தோடு கட்டிக் கொள்கையில்
கண்களில் காதலும்
நெஞ்சில் பாசமும் நிறைகிறதே...
அன்பிற்கு இலக்கணமும் நீ
உறவிற்கு உவமையும் நீ
பாசத்தின் வரைமுறையும் நீ
நேசத்தின் உருவமும் நீ
நீயே நீயே எனக்கு எல்லாம் நீயே...
என் உயிரும் நீயே
என் உடலும் நீயே
என் உள்ளம் கவர்ந்த
காதலனும் நீயே
என்னோடு நேசம் பகிர்ந்த
கணவனும் நீயே...
உன் ஓர விழிப்பார்வையில்
உயிர் வாழும் அற்புத
பிறப்பு நானே...
உன் நினைவுகளில்
உலகம் அமைக்கும்
விநோதமும் நானே...
உன் ஒரு வார்த்தையில்
துயரம் மறக்கும்
அதிசய படைப்பும் நானே...
உனக்காகவே துடிக்கும்
இதயம் கொண்ட
மங்கையும் நானே...
உனக்காக நான்
எனக்காக நீ என்று
சரித்திரம் படைக்கும்
நினைவுகளும் நாமே!!!