(Reading time: 1 minute)

கவிதை - கானல் நீராய் போவாயோ... - ஜெப மலர்

love

உறக்கம் தொலைத்தும்

உழன்றேன் படுக்கையிலே

கனவின் ஸ்பரிசம்

காணாமல் போய்விடும் என்பதால்... 

இமை மூடி காத்திருக்கிறேன்

இதயத்துடிப்பின் சத்தம் கேட்டு

விடாமல் துடிக்கிறது உன் நினைவோடே

விரும்பி ரசிக்கிறது உள்மனம்.. 

கானல் நீராய் கரைந்து போவாயோ?

காத்திருக்கும் வலியோடு மடிந்து போவேனோ?   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.