கவிதை - கானல் நீராய் போவாயோ... - ஜெப மலர்
உறக்கம் தொலைத்தும்
உழன்றேன் படுக்கையிலே
கனவின் ஸ்பரிசம்
காணாமல் போய்விடும் என்பதால்...
இமை மூடி காத்திருக்கிறேன்
இதயத்துடிப்பின் சத்தம் கேட்டு
விடாமல் துடிக்கிறது உன் நினைவோடே
விரும்பி ரசிக்கிறது உள்மனம்..
கானல் நீராய் கரைந்து போவாயோ?
காத்திருக்கும் வலியோடு மடிந்து போவேனோ?