கவிதை - தாயின் அன்பு... - ஜெப மலர்
பத்து மாதம் வயிற்றில் சுமந்து
புதிய உலகத்திற்கு அழைத்து வந்தாள்..
பருவம் வரும் வரை நெஞ்சில் சுமந்து
பக்குவமாய் படிக்க வைத்தாள்...
உயர்ந்த நிலையை அடைய
ஊக்கத்தை கொடுத்தாள்...
உயரிய வேலையில் அமர
இலட்சியத்தை ஏற்படுத்தினாள்...
வாழ கற்றுக் கொடுத்து
வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தாள்...
தனித்து வாழ்ந்து காட்ட
தனிக்குடித்தனம் அமைத்து தந்தாள்..
அத்தகைய தாயின் அன்பை மறந்த போதும்
என் நலனுக்காக வாழ்ந்தாள்...
ஆம்!!.. தாயின் அன்புக்கு நிகர்
இவ்வுலகில் ஏதுமில்லை...