கவிதை - கலையாத கனவு - ஜெப மலர்
கஷ்டங்கள் பல கண்டாலும்...
கவலைகள் சூழ்ந்து கொண்டாலும்...
விமர்சனம் உள்ளம் துளைத்தாலும்..
பரிகாசமாய் பகடி செய்து
தோல்வி பயத்தை காட்டினாலும்...
உனக்காய் நீ அமைத்த
உன் பாதையை தொடர்ந்திடு...
கவலை ஒருநாள் கலையும்
கனவு கண் முன்னால் பலிக்கும்...
உன் சிகரம் நீ தொட
உன் வழியை நீ உருவாக்கு...
விண்ணையும் தொடலாம்
உன்னவனின் நெஞ்சையும் தொடலாம்...
தடைகல்லை தகர்த்து எறி
முள்பாதையை சீர் படுத்து
உன் வழியில் அநேகர்
உயரம் காணட்டும்...
உன் பெயரை முத்திரையாய் பதித்திடு...
இனி வரும் தலைமுறை
இனிதாய் உனை தொடரட்டும்...
இதயத்தை தர மறுத்தவனுக்காக
வாழ்க்கையை தொலைக்காதே...
இமயத்தை தொட்டு காட்டு..
இதயத்தின் வலிமை காட்டு..
வாழ்க்கை மீண்டும் ஒளிரட்டுமே
கலையாத கனவாக..!!