கவிதை - அறிவாயா? வழியை - ஜெப மலர்
தொலைந்துபோன சாவிகளுக்காக
துண்டாக்கப்பட வேண்டியது பூட்டுகளா?
பிரச்சனை பூதாகரமாக தெரிவதற்கு
தண்டிக்கப்பட வேண்டியது இதயமா?
யோசித்துப்பார்த்தால் விடை கிடைக்கும்...
வினாக்களுக்கு மட்டுமல்ல பிரச்சனைகளுக்கும் தான்..
ஒரு பூட்டிற்கு இரண்டிற்கு மேலாக
சாவிகளை மனிதன் செய்தால்
எமனாய் நிற்கும் பி்ரச்சனையை
எதிர்க்க வழியும் இயற்கையாய் இருக்குமல்லவா...
பிரச்சனை கண்டு பயந்து போக
டென்சன் என்ற பூதம் ஏறி
அறிவு மீது படுத்துகொள்ள
செயல்படாத அறிவினால்
மென்மையான மனது இறுகி
கோபக்கனலை வார்த்தையாக உதிர்க்க
விடையாக வேண்டிய வார்த்தை
வினவாக அல்லவா மாறிவிடுகிறது....
சாவியே இல்லாத பூட்டை திறக்க
மாஸ்டர் கீயை கண்டறிந்த மனிதா நீ....
அன்பென்ற மாஸ்டர் கீ கொண்டு இதயத்தை திறந்து பாரத்தாயா??
திறந்து பார்...
டென்சன் என்ற பூதம்
தலைதெறிக்க ஓடும் வழியில்
தீர்வாய் நிற்கும் விடையும் உனக்கு...