(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அவரே எல்லாம் - ஜெப மலர்

மனம் கல்லாய் போன மானிடர் தவிர

உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும்

அடைந்திட எண்ணிஏங்கி தவிப்பது 

மாசற்ற மெய் அன்பிற்கே...

அன்பின் வலிமை யார் அறிவார்?

அடித்து செல்லும் வாழ்க்கையை மீட்க

ஆதாரமாய் விளங்கும் அன்பே

ஆதரவற்று அநாதையாய்

ஆழ்மனதில் தத்தளிக்கவும் செய்கிறதே..

மனம் செத்து மிருகமாய் அலையும்

மானுட பிறப்பை மனிதனாக்கும் அன்பே

மிருதுவான மனம் படைத்த அன்பனை

கடூரனாக மாற்றி அலைக்கழிக்கிறதே...

உலகில் அனைத்தும் நிரந்தரமற்றது என்பதற்கு

உகந்த உதாரணம் இது ஒன்று போதாதா? 

தேடி தேடி அலைந்து பெற துடிப்பது

தேற்றுவாரில்லாமல் நிறுத்தி விடும்

நாடி விரும்பி தேடி பிடித்திடு

உயிர்நாடியாய் விளங்கும் இறைவன் பாதத்தை...

அவர் அன்பே மெய் அன்பு

அவர் ஒருவரே உற்ற துணை...

வீழ்ந்திடாமல் காத்திடுவார்

வாழ்ந்திட வழியாய் அமைந்திடுவார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.