கவிதை - நிலா தூது - ஜெப மலர்
மணமேடையில் துணைக்காய் காத்திருக்கும்
மணமகன் நெஞ்சம் போல...
மனைமீது அமர்ந்து கண்மூடி
மனங்கவர்ந்த கள்வனின்
கனவுக்காக காத்திருக்கிறது உள்ளம்...
துணையின் துணை தேடி
உருகி உருகுலைந்து போன நிலா போல...
துன்பம் துடைத்து துணையாய் மாறி
தோளோடு அணைத்து கொண்டவனின்
நேசம் தேடி ஏங்கி நிற்கிறது மனம்...
தனித்து நிற்கும் தனிமையிலே
தஞ்சம் புகத்துடிக்கிறது உயிர்
தேற்றி கொள்ள விரும்பியும் முடியாமல்
தவித்து நிற்கும் என்னவனே..
கரைந்து நிற்கும் மதியை
கடல் கடந்து அனுப்புகிறேன் உன்னிடம்
காதல் தூது கொண்டு வரும்
கள்ளமில்லா நிலவிடம்
கண்சிமிட்டி உன் மகிழ்ச்சியை
கனப்பொழுதில் சொல்லிவிடு
கண்ணாடியில் ஒளிரும் பிம்பம் போல
கிரமமாய் சேர்த்திடும் என்னிடம்
உன் ஏக்கப் பெருமூச்சினை...