கவிதை - நட்புக்காக சில வரிகள் - ஜெப மலர்
வாழ்க்கைப் போராட்டத்தில்
வீழ்ந்து போய்விட துணிகையில்
அன்பென்னும் கேடகம் தந்து
அக்கறையோடு மீட்டு
பாசமென்னும் பாதுகாப்பில் அரவணைத்து
பண்பாய் பக்குவப்படுத்தி
உன் வார்த்தை என்னும் விரல் பிடித்து
நான் நடை பழகிட உதவிய நட்பு என்னும் உறவே
உனக்கு என் வந்தனங்கள்...