கவிதை - அ முதல் ஔ வரை நீயே - ஜெப மலர்
அன்பு மொழிகளால்
ஆயிரம் வழி கூறி
இயலாமையை புறந்தள்ளி
ஈகையாய் உன் நேசம் வார்த்தாயே...
உலகில் தனித்து வாழ
ஊக்கம் கொடுத்ததோடு
என் மேல் பாசத்தையும் பொழிந்தாயே...
ஏன் என்று அறிய நினைக்கையில்
ஐயம் அனைத்தையும் நீக்கி
ஒருங்கிணைந்து விட்டாயே ஆழ்மனதோடு
ஓவென்று கதறிடும் நேரங்களில்
ஒளடதமாய் மாறி அணைத்துக் கொண்டாயே என் உறவே...