கவிதை - செய்வாயா - ஜெப மலர்
உனக்காக நான் இருக்கிறேன் என்ற
ஒரு வார்த்தையிலே
ஓராயிரம் கோடி நம்பிக்கை தந்தாயே...
வார்த்தைகளிலே வழி அமைத்து
வனாந்திரத்தை விருட்சமாக்கினாயே...
சோலையாய் மலர்ந்து நிற்கும் இப்போது
மௌனம் என்னும் கோடாரியால் வெட்டுகிறாயே...
பிரச்சனையே வாழ்க்கை என்ற நிலையிலும்
பொறுமையாய் வாழ்ந்திட முடிந்த என்னால்
காரணமின்றி நீ காட்டும் மெளனத்தை ஏற்க முடியவில்லையே...
கல் மனதை கரைய செய்த நீயே
காயமாக உழுதுவிட்டாயே...
உன் அன்பால் பண்படுத்தி
வார்த்தையால் விதை விதைத்து
உன் நேசத்தால் நீர் பாய்ச்சி
வளர செய்திடு நம் உறவை...