கவிதை - விடை அறியா வினா - ஜெப மலர்
அணிகிற ஆடையும் உன்
அன்பை அடையாளம் காட்டுகிறதே...
படிக்கிற இடம்முதல் அமர்ந்து
பேசிய இடம் வரை அனைத்தும்
பாசத்தை மீட்டு தருகிறதே...
சந்தித்த இடங்களை காணும்போது
சப்தமில்லாமல் இதயம் துடிக்கிறதே...
பேச முடியாத பிரிவானாலும்
பார்க்க முடியாத தொலைவானாலும்
நெஞ்சோடு நிறைந்திருக்கும் நினைவுகள்
நேசத்தை அள்ளி தருகிறதே...
விழிகளுக்குள் நிறைந்திருக்கும் உன் முகம்
வழிந்தோடும் கண்ணீரை அறிந்திடுமா???
உள்ளத்தில் பதிந்திருக்கும் வார்த்தைகள்
உன்னோடு சம்பாஷித்திடுமா???
எண்ணங்களை ஆக்கிரமித்திருக்கும் உன் நினைவு
என் ஏக்கம் தீர்த்திடுமா???
என் மேல் நீ கொண்ட பாசம்
என்றென்றும் எனக்கு கிடைத்திடுமா???
அன்பு காட்டிய உன் இதயம்
ஆயுளுக்கும் இடம் தந்திடுமா???
வினாக்கள் ஆயிரம் எழுகிறது
விடையோ எதற்கும் கிடைக்கவில்லை....