(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கலந்துவிடு - ஜெப மலர்

விண்ணைத் தொட்டு

மண்ணில் வரும் என் கனவே!!

உன் துளி நீரால்

உள்ளம் தொடுகிறாயே..

சாரலாய் நனைத்து

மனதை குளிர்விக்கிறாயே..

நீ மண்ணை தொட்டதும்

வீசிடும் வாசனைக்கு

ஈடான மணம் உலகில் உண்டோ?

அன்பால் அணைத்து

உயி்ரினங்களுக்கு புத்துயிர் கொடுக்கிறாயே...

உன் நேசம் ஒன்றாலே

உவகை கொள்கிறது அவைகள்...

என் அன்பு தோழியே!!!!

உன் வரவை எதிர்நோக்கி

உனக்காக காத்திருக்கிறேன்

நேசத்தை சுமந்து வந்து

நலமாய் எங்களோடு கலந்து விடு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.