(Reading time: 1 - 2 minutes)

கவிதை - உதறி செல்லாதே - ஜெப மலர்

ஆற்று நீரோடு சேர்ந்து

அடித்து செல்லும் மீனாய் நான்...

எதிர் நீச்சல் போட்டு

எதிர் கொள்ள தெரியவில்லை

உயிர் துறந்த மீனைப்போல

உதறி தள்ளியவனின் நினைவில் 

அங்கும் இங்கும் முட்டி மோதி

ஆசை பாசங்கள் அனைத்தும் துறந்து

நீரோட்டம் செல்லும் திசையிலே

நின் துணையின்றி செல்கிறேன் நீரோடு...

எப்பக்கம் பார்த்தாலும்

அப்பக்கமெங்கும் பிம்பமாய் நீயே..

எத்திசை நோக்கினாலும்

அங்கெங்கும் நினைவுகளாய் நீயே...

வலி மறக்க மறந்து தேடி

வழி மறந்து போகிறேன் நீரோடு

பரிதவிக்க விட்ட நீயே

பாசமென்னும் பரிசில் கொண்டு மீட்டிடு

விலகி செல்வதே உன் விருப்பம் என்றால்

ஆழியோடு கலந்து உயிர் துறப்பேன்

உன் நினைவோடு நான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.