கவிதை - ஏன் இப்படி - ஜெப மலர்
தனிமையை வெறுத்த எனக்கு
தயவு காட்டாமல் அளித்த பரிசு "தனிமை"
தேடி தேடி உன் முகம் பார்த்த என் மேல்
தேவையில்லாத வெறுப்பு ஏனோ தோழா...
தந்தையாய் வழி காட்டிய நீ
நட்டாற்றில் தவிக்க விடுவதும் ஏனோ?
உடன்பிறப்பாய் அரவணைத்த நீ
உதறி தள்ளுவதும் ஏனோ?
தமக்கையாய் ஆதரவழித்த நீ
தவிக்க விட்டு செல்வதும் ஏனோ?
மெளனத்தின் காரணம் அறியும் அன்னை போல
மெனக்கெட்டு அன்பை பொழிந்த நீ
மரணிக்க செய்யும் மௌனம் காப்பதும் ஏனோ?
தாயும் தகப்பனும் உடன்பிறப்பும்
தந்த பாசத்தை காட்டி விட்டு
தனிமை தந்து கொல்வதும் ஏனோ?
என் மனது என்னையே கேள்வியால் துளைப்பதும் ஏனோ?
உன் பதில் கேட்க துணிவில்லாமல்
வெளியே சிரித்து உள்ளே அழும்
கோழையான வாழ்க்கையும் ஏனோ?
வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசும்
வாயாடிதனமும் மூர்ச்சையாகி போனது ஏனோ?
இயல்பை தொலைத்து
இயலாமையாய் மாற்றி
இளைக்க செய்து
இன்னல் தந்து
இம்சிக்க செய்வது தான்
பைத்தியமாய் வைக்கும் பாசத்திற்கு
பாரபட்சமின்றி கிடைக்கும் வெகுமதியோ???