கவிதை - என் ப்ராத்தனை - ஜெப மலர்
உன்னையே நினைத்து கொண்டிருக்கும்
நினைவலைகள் நீக்கப்படட்டுமே...
பைத்தியமாய் உன்னை தேடும்
தேடல் நிறைவு பெறட்டுமே...
உன் அன்பிற்காய் ஏங்கும்
ஏக்கம் முடிவு காணட்டுமே...
ஆதரவிற்காக காத்திருக்கும்
காத்திருப்பு உடையட்டுமே...
பாசத்திற்காக தவிக்கும்
தவிப்பு முற்று பெறட்டுமே...
உன் முகம் காண துடிப்பது
கனவாய் கலையட்டுமே...
உன்னோடு உறவாடிய நாட்கள்
புழுதியாய் பறக்கட்டுமே...
நீ யாரென்று நானறியா
புதுயுகம் தொடங்கட்டுமே....
உன்னை நான் மறந்த
பொன்னான நொடிகள்
உயிர் பெற்ற பின்பு
நீ என்னை நினைத்து பார்க்கும்
ஒரு தருணம் உன் வாழ்வில்
வராமல் மறையட்டுமே...
நான் பெற்ற இவ்வலியை
நீ எப்போதும் பெற்றிட கூடாதென்ற தவிப்போடு
ஞானமாய் சமர்ப்பிக்கிறேன்
என் கோரிக்கையை இறைவனிடம்...