(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்

வானில் நட்சத்திரம் கோடியாய் ஜொலித்தாலும்

மனம் கவருவது ஏனோ ஒற்றை நிலா தான்...

ஆயிரம் உறவு சூழ்ந்து இருந்தாலும்

இதயத்தில் இருப்பது நீ மட்டும் தான்...

சின்ன சின்ன விஷயத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி

விலை கொடுத்தாலும் கிடைத்திடுமா?

உரையாடும் வார்த்தைகளில் ஒன்று

உள்ளம் வரை ஊடுருவும் போது

மனம் பெறும் அமைதியை

வார்த்தையால் வர்ணிக்க முடியுமா?

ஒரு டிக் டபுள் டிக் ஆகி புளுவாக உருமாறி

பதில் வார்த்தை பதிவாவதை அறியும் போது

ஆழ்மனதோடு முகமும் பிரகாசித்திடும்

ஆனந்தத்தை அளந்திட முடியுமா?

முடிவில்லா காதலோடு

முகம் பார்க்க காத்திருந்து

முக நூலில் உன் அழகை ரசித்து

முற்று பெறாத இப்பொழுதில்

முத்தமிட்டு செய்தி அனுப்பி

மூடிய விழியில் மலரும் கனவிற்காக

மனம் திறந்து காத்திருக்கிறேன்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.